Local, News

அரசாங்கம் நழுவல் போக்கை கடைபிடிக்கிறது…

ஜனாதிபதி உரை மக்கள் எதிர்ப்புகளைத் தவிர்த்தது; மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் நழுவுகிறது – ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டம் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் ஜனாதிபதியின் உரை குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கமானது மாகாண சபை தேர்தல் நடத்துவதில் இருந்து விலகிச் செல்கிறது என்று சுட்டிக்காட்டினார்:

“மாகாண சபை தேர்தல் சம்பந்தமாக இந்த அரசாங்கம் ஒரு நழுவல் போக்கை கடைப்பிடிக்கிறது என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.”

மேலும், ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையானது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், ஜனாதிபதி பின்வருவனவற்றை வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்துவிட்டார் எனக் குறிப்பிட்டார்:
“மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற எதிர்ப்புகளைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்துவிட்டார்,” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *