Local, News

இன்று காலை கோர விபத்து மூன்று பேர் பலி…

இன்று காலையிலே பதிவான கோர விபத்தில் 3 பேர் பலி 10 பேருக்கு காயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் கனுவா பகுதிக்கு அருகில் கோர விபத்து

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக வந்த கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *