Local, News

உலக முடிவில் தவறி விழுந்த மாணவி மீட்ப்பு…

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி – பல மணிநேர தேடுதலின் பின்னர் பாதுகாப்பாக மீட்பு.

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதோ குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்ததுடன், அவரை மீட்க பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடினார்.

அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர், வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *