Blog
நடைபெற்று வரும் மோதல்கள் சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதியின் நிலைப்பாடு…..
நடைபெற்று வரும் மோதலின் மத்தியில் இலங்கை நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றும் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரான் கப்பல் தொடர்பான நிலைமையைப் பற்றி விளக்கமளித்த அவர், ஈரானின் IRIS Bushehr கப்பலில் இருந்த மாலுமிகள் கொழும்பு துறைமுகத்தில் கரை இறக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அதன் பின்னர் அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் இருந்த 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்பிற்கு கொண்டு வர இலங்கை கடற்படை ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் “ஈரான் கப்பலில் 300 குழந்தைகள் இருந்தனர்” என்ற தகவலை அவர் மறுத்து, அது தவறான செய்தி என கூறினார்.
தற்போதைய நுணுக்கமான சூழ்நிலையில் சிறிய அரசியல் இலாபங்களுக்காக இந்த விடயத்தை பயன்படுத்தாமல், அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

