Local, News

போதையால் முட்டி சிக்கிய முச்சக்கர வண்டி….

30.09.2025 இன்று  திருகோணமலை மாவட்டம், திருகோணாமலையிலிருந்து புல்மோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மீது நிலாவளி பிரதான வீதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டி சாரதிக்கும் அவருடைய மகனுக்கும் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி திருமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எமது அப்பகுதி ஊடகவியலாளர் ஊடாக தெரிய வருவதாவது முச்சக்கர வண்டி சாரதி கடுமையான போதையின் இருந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை நிலாவெளி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *