Blog
புல்மோட்டையில் மதுபானக் கடைக்கு தடை….
மதுபானக்கடை(சாராய) திறப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை பிரேரணை நிறைவேற்றம்.
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச சபையின் 2026.01.27 மாதாந்த சபை அமர்வில் புல்மோட்டை பகுதியில் மதுபானக்கடை ஒன்று நபர் ஒருவரால் திறப்பதற்கு ஆயத்தமான போது திறப்பதற்கு அனுமதிப்பதில்லை என்ற பிரேரணை சபையால் நிறைவேற்றப்பட்டது.
கௌரவ உறுப்பினர்களான ASM.றியாஸ் அவர்கள் முன்மொழிய HB.ஸல்மான்பாரீஸ்அவர்கள் வழிமொழிந்து சபையில் பிரேரணை கொள்வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(புல்லட் செய்திகளுக்காக நவீத் நஜாஜி)




