Blog
ஈமானா??? போட்டியில் வெற்றியா???
பன்றி இறைச்சியை சமைக்க மறுத்த பெண்மணியை வாழ்த்தலாமே …..
சமையல் போட்டியில், பன்றி இறைச்சியை சமைக்க மறுத்த முஸ்லிம் சகோதரி, இலங்கை முஸ்லிம்களின் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.
அல்லாஹ் இவருக்கு ரஹ்மத் செய்யட்டும். நமது பிரார்த்தனையில் இவரை இணைத்துக் கொள்வோம்
இந்த சம்பவம் மாஸ்டர்செஃப் இலங்கை (MasterChef Sri Lanka) சமையல் போட்டி நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனில் (Season 2) பன்றி இறைச்சியைச் சமைக்கும் சவால் (Pork Challenge) வழங்கப்பட்டபோது, பங்குபற்றிய ஷப்னம் (Shabnam) என்ற முஸ்லிம் சகோதரி, தனது மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனைச் சமைக்கவோ அல்லது கையாளவோ மறுத்து அச்சவாலிலிருந்து விலகிக்கொண்டார்.
