Blog
10லட்சம் வென்ற சந்தோஷத்தில் மரணத்தை தழுவிய இளைஞன்….
லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரண – வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

