Blog
இஸ்ரேலிய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்து கதவடைத்தது பாகிஸ்தான்
இஸ்ரேலிய பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் (Islamabad Talks 2026) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகின்றன.
இதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்குப் பாகிஸ்தான் அரசு “வருகைக்கால விசா” (Visa-on-arrival) வசதியை வழங்கியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக் குழுவினருக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாக இஸ்ரேலை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. “நாங்கள் இஸ்ரேலையோ அல்லது அவர்களின் குடிமக்களையோ அங்கீகரிக்கவில்லை” என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், இந்த விசா வசதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் நாடுகளின் (ஈரான் மற்றும் அமெரிக்கா) அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற நாட்டு பத்திரிகையாளர்களுக்குப் பொதுவான அனுமதி இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் கடவுச்சீட்டுகளில் (Passport) “இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும்” என்று அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

