News

ஊழியரை தாக்கிய குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்…

2026.07.06 இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் குச்சவெளி பிரதேச சபை ஊழியர்களால் ஆர்ப்பாட்டம்; நடந்தது என்ன?? பாதிக்கப்பட்ட ஊழியர் மற்றும் சக ஊழியர்கள் கூறுகையில் குச்சவெளி பிரதேச சபையில் தவிசாளர் A.P.முபாரக் அவர்கள் பிரதேச சபையின் அரச ஊழியராக கடமை புரியும் M.சமீர் ஆகிய எனக்கு” பிரதேச சபை செயலாளரால் தபாலிடுமாறு வழங்கப்பட்ட கடிதத்தை தபாலிட்டதற்காக வேண்டி தவிசாளர் அவர்கள் தன்னுடைய அறைக்குள் வரவழைத்து செயலாளர் தந்த கடிதத்தினை எனக்கு காட்டாமல் அல்லது சொல்லாமல் எதற்காக தபாலிட்டாய்? எனக் கேட்டு என்னை தாக்கினார்.” என்று கூறினார்.

(புல்லட் செய்திகளுக்காக

ஊடகவியலாளர் நிலாவெளி கிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *