Blog
காலநிலை மாற்றம் காரணமாக வழக்கு ஒத்திவைப்பு…..
லஞ்ச ஊழல் செய்த குற்றச்சாட்டில் திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஐனியப்பிள்ளை முபாரக் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் 14 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் கடந்த 2025.11.13 கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் 2025.11.28 ஆம் திகதி வரை விளக்கம் மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தினம் இருந்தாலும் நாட்டினுடைய காலநிலை மற்றும் அவசரநிலை காரணமாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ் )

